இளைஞர் முகாமின் இறுதி சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கெளரவ பிரதமரின் கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் நிதி ஓதுக்கீட்டின் கீழ் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினது மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்   கடந்தத 2016/11/04,05,06 (வெள்ளி சனி ஞாயிறு) ஆகிய தினங்களில் குறிஞ்சாமுனை மட்/ம மே/ அரசினர் தமிழ் கலவன்  பாடசாலையில் 100 இளைஞர் யுவதிகளின் பங்குபற்றலோடு வதிவிடமாக நடைபெற்ற பிரதேச இளைஞர் முகாம் ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவு செய்யப்பட்டது.


இறுதி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயிற்சியினை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு  சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

மேலும் இந் நிகழ்விற்கு அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் MLMN.நைறுஸ், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் உத்தியோகஸ்தர் S.சிறிதரன், மற்றும் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர், உபதலைவர், உப செயலாளர், குறிஞ்சாமுனை பத்ர காளியம்மன் ஆலயத்தினுடைய பொருளாளர், கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 இம் முகாமில் இளைஞர் யுவதிகளின் ஆளுமை ஆற்ல்களை விருத்தி செய்யும் விரிவுரைகளும், யோகாசன பயிற்சிகளும்  , இசையும் இரசனை, தீப்பாசறை போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.