போலி நாணயத்தாளுடன் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு பிணை

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் போலி நாணயத்தாளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் இருவரும் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழடை இருவரும் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இருவரையும் சரீரப்பிணையில் நீதிபதி எம்.றிஸ்வி விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட மகிழுர்முனைப்பகுதியில் உள்ள மதுபானசாலையில் ஐந்தாயிரம் ரூபா போலி நாணயம் ஒன்றை மாற்றமுயன்றபோதே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் காத்தான்குடி பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.