வீரமுனையில் கல்வி நிர்வாக சேவையில் சித்தியடைந்தவர் கௌரவிப்பு

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஆசிரியரான பூபாலபிள்ளை பரமதயாளன் அண்மையில் நடைபெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை பரீடசையில் சித்தி பெற்றதை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இவர் அண்மையில் நடை பெற்ற பாடசாலை அதிபர் பரீடசையிலும் சித்தி பெற்று அதிபர் அச்சேவையிலும் இணைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் அவரை பாராட்டும் விதமாக வீரமுனை சமூக கலாசார மேம்பாட்டு ஒன்றியம் ஏற்பாடு செய்த நிகழ்வில் ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய நிர்வாகம், ஆலய குருக்கள், கல்வி அபிவிருத்திக் குழு, சீர்பாததேவி சமூக சேவைகள் மன்றம்,
பழைய மாணவர்கள் ஒன்றியம், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் சார்பாக சமூக கலாசார மேம்பாட்டு ஒன்றியம் சார்பான பிரதிநிதிகள் இணைந்து பரமதயாளன் அவர்களை பாடசாலை முன்றலில் வாழ்த்தி கௌரவிக்கப்படடார்.