காரைதீவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை 7.00மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான பெரியகல்லாறு,பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த எஸ்.விமலேந்திரன்(41வயது)என்பவரே உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தார்.

வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவரை பின்னால் வந்த கன்டர் வாகனம் மோதியுள்ளடன் அவரின் மேல் ஏறியும் சென்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து குறித்த குடும்பஸ்தர் கல்முனை,அஸ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின்போது தப்பிச்செல்ல முயன்ற கன்டர் வாகன சாரதியை பொதுமக்கள் பிடித்து சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவித்தன.

இது தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.