(லியோன்)
சர்வோதய ஸ்தாபகர்
கலாநிதி எ .டி ஆரியரத்னவின் 85வது அகவையினை சிறப்பிக்கும் விசேட நிகழ்வுகள் இன்று
மட்டக்களப்பில் நடைபெற்றது
.
சர்வோதயத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கலாநிதி எ.டி..ஆரியரத்னவின் 85வது அகவையில் காலடி பாதிக்கும் நிகழ்வினை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில்
நடைபெற்று வருகின்றது .
இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட
தேசோதய சபையும் மட்டக்களப்பு பிராந்திய சர்வோதயமும் இனைந்து மட்டக்களப்பு மாவட்ட தேசோதய தலைவரும் , மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய பிரதி அதிபருமான எம் .பகிரதன்
ஒழுங்கமைப்பில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றது .
இதன் ஆரம்ப நிகழ்வாக சர்வோதய
பிராந்திய வளாகத்தில் சிரமதான பணிகளும்
தொடர்ந்து “ உதிரம் வழங்கி உயிர் காப்போம் “ எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம்
இடம்பெற்றது .
இதனை தொடர்ந்து ஆரியரத்னவின் 85வது அகவையினை
சிறப்பிக்கும் வகையில் சர்வோதய பிராந்திய வள வளாகத்தில் 85 தென்னங்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் தொடர்ந்து ஆரியரத்னவின் 85வது அகவையினை
சிறப்பிக்கும் வகையில் கேக் வெட்டப்பட்டு சிறப்பு நிகழ்வுகள் சர்வோதய மண்டபத்தில்
நடைபெற்றது .
இன்று நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பிரதம விருந்தினராக கிழக்கு
மாகாண விவசாய ,கால்நடை அமைச்சர் கே
.துரைராஜசிங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார் .
இதேவேளை நடைபெற்ற நிகழ்வுகளில் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே .பி . கீர்த்திரத்ன , மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி
ரவிச்சந்திரன் , மாகாண சர்வோதய இணைப்பாளர்
இ .சி .எ . கரீம், மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் நளின் மற்றும் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் ,மட்டக்களப்பு - அம்பாறை சர்வோதய
அங்கத்தவர்கள் . பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மதத்தலைவர்கள் , சிவில்
அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டனர்