(லியோன்)
மட்டக்களப்பு
கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபை ஆலய 146 வது ஆண்டு நிறைவு விழா மட்டக்களப்பில் நடைபெற்றது .
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் மட்டக்களப்பு கோட்டமுனை ஆலயத்தின் 146 வது ஆண்டு
நிறைவினை சிறப்பிக்கும் விசேட ஆராதனை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு – கிழக்கு
மாகாண சபைத் தலைவரும் மட்டக்களப்பு
கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபையின் ஆலய சேகர முகாமைக்குருவமான அருட்பணி .எஸ் .எஸ் .
ரேரன்ஸ் தலைமையில் விசேட ஆராதனை 06.11.2016 நடைபெற்றது .
ஆலய 146 வது ஆண்டு
நிறைவு விசேட ஆராதனையில் பிரதம விருந்தினராக தெனியாய மிஷன் முன்னால் திருப்பேரவைத்
தலைவரும் ,குருவானவருமான அருட்பணி டுலிப்
. ஆர் . பெர்னாண்டோ , இலங்கை மெதடிஸ்த திருச்சபை உபதலைவர் எஸ் .வரதசீலன் ஆகியோர் கலந்துகொண்டு ஆண்டு
நிறைவு ஆராதனையினை சிறப்பித்தனர்
கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபையின் ஆலய 146 வது ஆண்டு
நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில் புதிய குழு
அங்கத்தவர்களுக்கு நற்கருணை வழங்கப்பட்டதுடன் , திருச்சபை
சிறார்களினால் கேக் வெட்டி 146 வது ஆண்டு நிறைவு விழா
கொண்டாடப்பட்டது .
இதனை தொடர்ந்து மக்களின் நலன்கருதி
கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபையின் ஆலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள
பால் உற்பத்தி குளிர் பான நிலையத்தினை
அருட்பணி டுலிப் . ஆர் .
பெர்னாண்டோ திறந்து வைத்தார் .
இன்று நடைபெற்ற மட்டக்களப்பு கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபையின் ஆலய 146 வது ஆண்டு நிறைவு விசேட ஆராதனையிலும் , ஆண்டு நிறைவு விழாவிலும் இலங்கை
மெதடிஸ்த திருச்சபையின் குழு அங்கத்தவர்களா கலந்து சிறப்பித்தனர் .