கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபை ஆலய 146 வது ஆண்டு நிறைவு விழா (VIDEO & PHOTOS)

 (லியோன்)

மட்டக்களப்பு கோட்டமுனை  மெதடிஸ்த திருச்சபை ஆலய 146 வது ஆண்டு நிறைவு விழா மட்டக்களப்பில் நடைபெற்றது .


இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் மட்டக்களப்பு கோட்டமுனை ஆலயத்தின்  146 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் விசேட ஆராதனை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு – கிழக்கு மாகாண  சபைத் தலைவரும் மட்டக்களப்பு கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபையின் ஆலய சேகர முகாமைக்குருவமான அருட்பணி .எஸ் .எஸ் . ரேரன்ஸ் தலைமையில் விசேட ஆராதனை 06.11.2016 நடைபெற்றது .

ஆலய 146 வது ஆண்டு நிறைவு விசேட ஆராதனையில் பிரதம விருந்தினராக தெனியாய மிஷன் முன்னால் திருப்பேரவைத் தலைவரும் ,குருவானவருமான அருட்பணி  டுலிப் . ஆர் . பெர்னாண்டோ , இலங்கை மெதடிஸ்த திருச்சபை உபதலைவர்  எஸ் .வரதசீலன் ஆகியோர் கலந்துகொண்டு ஆண்டு நிறைவு ஆராதனையினை சிறப்பித்தனர்

கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபையின் ஆலய 146 வது ஆண்டு நிறைவு    விழாவினை சிறப்பிக்கும் வகையில் புதிய குழு அங்கத்தவர்களுக்கு நற்கருணை வழங்கப்பட்டதுடன் , திருச்சபை  சிறார்களினால் கேக் வெட்டி  146 வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது .

இதனை தொடர்ந்து மக்களின் நலன்கருதி  கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபையின் ஆலய வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பால் உற்பத்தி குளிர் பான நிலையத்தினை  அருட்பணி  டுலிப் . ஆர் . பெர்னாண்டோ திறந்து வைத்தார் .

இன்று நடைபெற்ற மட்டக்களப்பு கோட்டமுனை மெதடிஸ்த திருச்சபையின் ஆலய 146 வது ஆண்டு நிறைவு  விசேட ஆராதனையிலும் , ஆண்டு நிறைவு விழாவிலும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் குழு அங்கத்தவர்களா கலந்து சிறப்பித்தனர் .