மட்டக்களப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கான தெளிவூட்டல் ஞாயிறு காலை வசந்தம் தொலைக்காட்சியில்


மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கான தெளிவூட்டல் வசந்தம் தொலைக்காட்சியில் மக்கள் சேவை நிகழ்ச்சி ஊடாக 30.10.2016 ஞாயிறு காலை  08.00 மணிக்கு இடம் பெறவுள்ளது.

கெளரவ பிரதமரின் தேசியக் கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின்  வழிகாட்டல் மற்றும் சிந்தனையின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடு பூராகவும் 1500 இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இவ் வேலைத்திட்டங்களில் 44 அபிவிருத்தி திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு தெளிவு படுத்துவதற்க்காக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ஜனாப் MLMN. நைறுஸ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.