தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்

(லியோன்)

தேசிய  வாசிப்பு  மாதத்தின்   இறுதி  நாள்  நிகழ்வுகள்    இன்று  மட்டக்களப்பு கல்லடி  சிவானந்தா  தேசிய  பாடசாலையில் நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையின் தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பிக்கு வகையில் வாசிப்பு உலக அறிவிற்கான நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் இறுதி நிகழ்வு    பாடசாலை நூலக ஆசிரியர் ஜீவதாஸ் ஒழுங்கமைப்பில்    பாடசாலை  அதிபர்  கே . மனோராஜ் தலைமையில்  பாடசாலை  மண்டபத்தில்   இன்று நடைபெற்றது .

மாணவர்கள்   மத்தியில்  வாசிப்பு  பழக்கத்தை   அதிகரிக்கவும்  வாசிப்பின் மூலம் சிறந்த  சமூகத்தை  உருவாகும்    நோக்கில்  ஒக்டோபர் மாதத்தில்   மாணவர்களுக்காக வாசிப்பு   தொடர்பான  தெளிவூட்டல்களும் போட்டி பரீட்சைகளும் நடத்தப்படுகின்றன .

போட்டிகளில்  வெற்றி   பெற்ற மானவர்களுக்கு  பரிசில்களும்  வழங்கப்பட்டதுடன் மாணவர்களின்  கலாச்சார  நிகழ்வுகளும் இடம்பெற்றது  .

இந்நிகழ்வில்   ஆன்மீக  அதிதியாக   கல்லடி  இராமகிருஷ்ண  மிஷன்  தலைவர்  சுவாமி  சதுர் புஜானந்தஜி   கலந்துகொண்டதுடன் ,  இந்நிகழ்வுக்கு  பிரதம  அதிதியாக    கிழக்கு  பல்கலைக்கழக  சிரேஷ்ட  நூலகர்    திருமதி  டி . அருந்ததி  கௌரவ   அதிதியாக  மண்முனை  வடக்கு  கோட்டக்கல்வி  அதிகாரி  .சுகுமாரன்   மற்றும் இந்நிகழ்வில்  பாடசாலை  ஆசிரியர்கள் ,   மாணவர்கள்    கலந்து கொண்டனர் .