(லியோன்)
தேசிய வாசிப்பு
மாதத்தின்
இறுதி நாள் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா
தேசிய பாடசாலையில் நடைபெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி சிவானந்தா தேசிய
பாடசாலையின் தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பிக்கு வகையில் வாசிப்பு உலக
அறிவிற்கான நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் இறுதி நிகழ்வு பாடசாலை நூலக ஆசிரியர் ஜீவதாஸ்
ஒழுங்கமைப்பில் பாடசாலை அதிபர் கே . மனோராஜ்
தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இன்று
நடைபெற்றது .
மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் வாசிப்பின் மூலம் சிறந்த சமூகத்தை உருவாகும் நோக்கில்
ஒக்டோபர் மாதத்தில்
மாணவர்களுக்காக வாசிப்பு தொடர்பான தெளிவூட்டல்களும்
போட்டி பரீட்சைகளும் நடத்தப்படுகின்றன .
போட்டிகளில் வெற்றி பெற்ற மானவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக
கல்லடி இராமகிருஷ்ண மிஷன்
தலைவர் சுவாமி
சதுர் புஜானந்தஜி
கலந்துகொண்டதுடன் , இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட நூலகர்
திருமதி டி . அருந்ததி கௌரவ அதிதியாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி
அதிகாரி எ .சுகுமாரன் மற்றும் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர் .