தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மலையக தோட்டத்தொழிலாளர்களின் உரிமையை பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் சம்பள உயர்வினை வழங்குமாறு வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட உழகை;கும் மக்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நடைபெற்றது.

மலையத்தில் 1000ரூபா சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அதற்கு ஆதரவாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இரண்டாவது தடவையாக மட்டக்களப்பில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட தொழிற்சங்க பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட உழகை;கும் மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகள்,பல்கலைக்கழக மாணவர்கள்,மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் என பெருளவானோர் கலந்துகொண்டனர்.