கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

புhடசாலையின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சுpறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன்,உடற்கல்வி பிரதிப்பணிப்பாளர் வி.லவகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்Nவுறு துறையில் சாதனைகளைப்படைத்த மாணவர்கள் கௌரவிக்கட்டதுடன் உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வின்போது நடன ஆசிரியையான நடனக்கலைமாமணி திருமதி சசிகலாராணி ஜெயராமின் மாணவிகளின் நடன நிகழ்வுகள் காண்போரை மகிழ்ச்சியிலாத்த்தியது.

இந்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் பெற்றோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.