மலையக மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முன்பாக் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.
இலங்கையில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட ஈரோஸ் ஜனநாயக முன்னணியினாது தொடர்ச்சியாக மலையக மக்களுக்காக குரல்கொடுத்துவருகின்றது.
இதன் அடிப்படையில் மலையக மக்களின் சம்பள பிரச்சினையை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் மலையக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.
இதன்கீழ் முதன்முறையாக மலையக தொழிலாளர்களுக்கு ஆதரவாக வடகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் குணசீலன் சௌந்தரராஜன் உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மலைய தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள இக்கட்சி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தமதுபோராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
மலைய தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை 1000ரூபா உடன் வழங்கு,மலையக மக்களின் நியாயமான போராட்டத்திற்கு எமது தார்மீக ஆதரவு போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக முன்பாக் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.
இலங்கையில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட ஈரோஸ் ஜனநாயக முன்னணியினாது தொடர்ச்சியாக மலையக மக்களுக்காக குரல்கொடுத்துவருகின்றது.
இதன் அடிப்படையில் மலையக மக்களின் சம்பள பிரச்சினையை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் மலையக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடாத்திவருகின்றனர்.
இதன்கீழ் முதன்முறையாக மலையக தொழிலாளர்களுக்கு ஆதரவாக வடகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் குணசீலன் சௌந்தரராஜன் உட்பட கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மலைய தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள இக்கட்சி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தமதுபோராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
மலைய தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கை 1000ரூபா உடன் வழங்கு,மலையக மக்களின் நியாயமான போராட்டத்திற்கு எமது தார்மீக ஆதரவு போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.