மட்டக்களப்பில் மாபெரும் தொழிற் சந்தை.

மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக மாபெரும் தொழில் சந்தை ஒன்று இன்று சனிக்கிழமை (01,10,2016) காலை 08,30 மணியளவில் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர், மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் நூற்றுக்கக்காண இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.