(லியோன்)
மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தல வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது .
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமானஆயித்தியமலை
தூய சதாசகாய அன்னையின் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா கூட்டுத் திருப்பலியை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை
தலைமையில் பங்குதந்தை அருட்பணி
சுலக்சன் ,அருட்பணி அலக்ஸ் ரொபட்
,அருட்பணி அம்புறோஸ் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர் .
ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா பங்குதந்தை அருட்பணி சுலக்சன் தலைமையில்
26.09.2016 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
.
திருத்தல திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு
திருசெபமாலையும், மறைவுரைகளும், பிராத்தனைகளுடன் திருப்பலிகளும்
இடம்பெற்றது .
03 .09.2016 சனிக்கிழமை மாலை 05.30
மணிக்கு விசேட நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும் இடம்பெற்றதுடன் தொடர்ந்து
அன்னையின் திருச்சுருவ பவணியும் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .
இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு
மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை
தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதுடன் திருப்பலியின்
பின் அன்னையின் திருச்சுருப பவணியும் தொடர்ந்து திருவிழா
திருநாள் கொடியிறக்கத்துடன் திருத்தல வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது .
இன்று இடம்பெற்ற ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னையின் திருத்தல திருவிழா திருப்பலியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதியிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு
திருவிழா திருப்பலியை சிறப்பித்தனர்