மட்டக்களப்பு கீரிமடு சித்திவிநாயகர் தேர்த்திருவிழா

மட்டக்களப்பு நகரில் ஆலயங்களில் இன்று காலை தேர் உற்சவங்கள் சிறப்பாக நடைபெற்றன.
மட்டக்களப்பு தேவநாயகம் வீதியில் உள்ள ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

காலை விசேட பூஜைகள் நடைபெற்று பஞ்சமுக கணபதிக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து தேரடிக்கு பிள்ளையார் கொண்டுவரப்பட்டு அங்கு பூஜைகள் நடைபெற்றது.இதன்போது அடியார்கள் தேங்காய் உடைது தேரினை பக்தியுடன் இழுந்துச்சென்றனர்.

இந்த தேர் உற்சவத்தின்போது மாணவிகளின் நாட்டிய நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.