(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டச் செயலக புதிய நிர்வாக கட்டடத் தொகுதிக்கான
அடிக்கல் நாட்டும் நிகழ்வு திராய்மடு
பகுதியில் நடைபெற்றது .
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வலிகாட்டலின்
கீழ் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் மற்றும்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அமைச்சர்களின்
பங்குபற்றலுடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
வஜிர அபேயவர்த்தனவினால் 804
மில்லியன் செலவில் மட்டக்களப்பு
திராய்மடு பகுதியில் அமைக்கப்படவுள்ள
மட்டக்களப்பு மாவட்டச் செயலக புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல்
நாட்டும் நிகழ்வு 11.09.2016 ஞாயிற்றுக்கிழமை
திராய்மடு பகுதியில் நடைபெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி .எஸ் .எம் . சார்ள்ஸ்,
கிழக்குமாகாண ஆளுநர் ஒஸ்டின் பெனாண்டோ , கிழக்குமாகாண முதலமைச்சர் நசீர் ஹகமட் ,
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ் .எஸ் .அமீர் அலி ,மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் ஞா .ஸ்ரீநேசன் ,
பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா , சுகாதார பிரதி அமைச்சர் பயிசல்
காசிம் ஆகியோர் கலந்துகொண்டு மாவட்டச் புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கலை நாட்டி
வைத்தனர் .
இதனை தொடர்ந்து இடம்பெற்ற
நிகழ்வில் அரச திணைக்கள அதிகாரிகள் ,அரசியல் வாதிகள், மாவட்ட பிரதேச செயலக
பிரதேச செயலாளர்கள் , பொதுமக்கள் என பலர்
கலந்துகொண்டனர் ..