ஏறாவூர் பகுதியில் தாயும், மகளும் இனந்தெரியாத நபரால் வெட்டி கொலை

(லியோன்)

ஏறாவூர்  பகுதியில் வீடொன்றில் இருந்து தாயும் மகளும்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி, முதலாவது ஒழுங்கையில் வசித்து வந்த தாயும் மகளும் சனிக்கிழமை (10) இரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நூர்முஹம்மது சித்தி ஜனீரா (வயது 55) மற்றும் அவரது மகளான ஜனீரா பானு மாஹிர் (வயது 34 ) ஆகியோரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் நுழைந்துள்ள இனந்தெரியாத நபரால் வெட்டி  இக்கொலையை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த  யுவதியின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதாகவும் குறித்த யுவதியும்  வெளிநாட்டில் தனது கணவனுடன் தங்கி இருந்து இலங்கைக்கு வந்து ஆறுமாதங்கள் கடந்த நிலையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற தடவியல் பொலிஸ் புலனாய்வுத்துறையினர் தெரிவித்தனர்.