(லியோன்)
மட்டக்களப்பு சலாமா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் “மேலும் எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழவைத்தார் போலாவார் “ எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று காலை நடாத்தப்பட்டது.
சலாமா விளையாட்டு கழக இளைஞர்கள் மனித நேய சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலே இந்த முதல் சமூக பணியினை முன்னெடுத்துள்ளனர்
இதற்கு அமைவாக இன்று காலை 08.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது .
சலாமா விளையாட்டு கழகத்தின் தலைவர் எம் .ஆர் .சக்கி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இளைஞர்கள் , வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் டாக்டர் எ .எ .தமயந்தி மற்றும் தாதியர்களும் கலந்துகொண்டனர்.