(லியோன்)
பிரதேச செயலக மட்ட விளையாட்டு
கழகங்களுக்கிடையிலான 10 ஓவர்கள்
மட்டுப்படுத்தப்பட்டு மென்பந்து கிரிகெட் சுற்று போட்டிகளில் மட்டக்களப்பு
ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகம் ஜம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு இருதயபுரம்
கோல்டன் ஈகள் விளையாட்டு கழக ஏற்பாட்டில் கழகத்தின்
28வது வருட நிறைவினையும் காலம் சென்ற கழக வீரர் புவிராஜின்
21 வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் பதிவு செய்யப்பட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான 10 ஓவர்கள் கொண்ட மென்பந்து
கிரிகெட் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டது .
இந்த பிரபல விளையாட்டு கழகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட கழகங்களுக்கிடையிலான 10 ஓவர்கள் கொண்ட மென்பந்து
கிரிகெட் சுற்று போட்டியின் இறுதி போட்டி மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்த
கல்லூரி மைதானத்தில் 18.09.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது .
10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டு நடைபெற்ற மென்பந்து கிரிகெட் சுற்று போட்டியில் கலந்துகொண்ட 24 விளையாட்டு கழகங்களில் இறுதி சுற்றுக்கு மட்டக்களப்பு
டிஸ்கோ விளையாட்டு கழகமும் மட்டக்களப்பு ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகமும் தெரிவானது .
இறுதியாக இரு கழகங்களுக்கிடையில்
நடைபெற்ற போட்டியில் மட்டக்களப்பு டிஸ்கோ
விளையாட்டு கழகம் 10 ஓவர்கள் முடிவில் அனைத்து
விக்கெட்டுக்களையும் இழந்து 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய
ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகம் 10 ஓவர்கள்
முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .
இதன் அடிப்படையில் 3 ஓட்டங்களால் மட்டக்களப்பு
ஆரையம்பதி ஏசியன் விளையாட்டு கழகம் வெற்றிபெற்று நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச
செயலக கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்ட
மென்பந்து கிரிகெட் சுற்று போட்டியில் ஜம்பியனாக தெரிவு செய்யப்பட்டதுடன் 2016 ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு இருதயபுரம் கோல்டன் ஈகள் மற்றும் புவிராஜ்
சவால் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக
கிழக்குமாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா , கருவப்பங்கேணி
விபுலானந்த கல்லூரி
அதிபர் மற்றும் பிரதேச செயலக விளையாட்டு கழகங்களின்
உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.