கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் கணிதம் , விஞ்ஞானம் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கான தெரிவுப் பரீட்சையில் 74 சத வீதமானோர் சித்தி பெறவில்லை மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி கவலை வெளியிட்டுள்ளார்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கரடியநாறு மகிழவட்டுவான் ஆகிய இடங்களிலுள்ள மாகாண பள்ளிக் கூடங்களில் தொழில் நுட்ட ஆய்வு கூடங்கள் மாகாண கல்லி அமைச்சர் சி. தண்டாயுதபாணி திறந்து வைத்து உரையாற்றிய போதே இந்த கவலையை வெளியிட்டிருக்கின்றார்.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் கணிதம் , விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான ஆசரியர் பற்றாக் குறை பாரிய பிரச்சினையாக காணப்படுவதாகவும் இவை நிவர்த்தி செய்யப்பட வெண்டும் என இந் நிகழ்வுகளில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும் மாகாண சபை உறுப்பினர்களினாலும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்து உரையாற்றிய மாகாண அமைச்சர் சி . தண்டாயுதபாணி ''கணிதம் , விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு பட்டதாரிகளை தெரிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டிருந்த முயற்ச்சிகள் கூட எதிர்பார்த்த பலனை தரவில்லை '' என்றார்.
''கிழக்கு மாகாண பாடசாலைகளில் கணிதம் . விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் காலியாகவுள்ள 1134 வெற்றிடங்கள் நிரப்புவதற்காக தகுதியுடைய பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. 1500 விண்ணப்பங்கள் கிடைத்தன . போட்டிப்பரீட்டசையில் 390 பேர் மட்டுமே தெரிவுக்குரிய தகுதியை பெற்றிருக்கின்றார். .'' என்றும் தனது உரையில் சுட்டிக் காட்டினார்
இம் மாகாணத்திலுள்ள வெற்றிடங்களை கருத்தில் கொண்டு இந்நியமனம் தொடர்பான நியதிகளில் சில தளர்வுகள் தேவை என மத்திய அரசை மாகாண கல்வி அமைச்சு கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை
கிழக்கு மாகாண பாடசாலைகளில் தமிழ் ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை தொடர்ந்தும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே காணப்படுகின்றன. இதனால் கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா சான்றிதழ் பெற்று வெளியேறும் தமிழ் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
'' யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு ,வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வு மற்றும் கல்வியில் ஆர்வம் இன்மை போன்றவே இதற்கு பிரதான காரணங்கள் என கண்டறியப்பட்டுள்ளது
புதிதாக கல்வியல் கல்லூரிகளிலிருந்து வெளியேறியுள்ள ஆசிரியர்களில் தமிழ் மொழி ஆசிரியர்களில் கனிசமானோர் முஸ்லிம்கள்.'' என்றும் குறிப்பிட்டார் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி; தண்டாயுதபாணி.