இலங்கை
பொலிஸ் திணைக்களத்தின் 150வது பொலிஸ் தினம் இன்று
நாடெங்கிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.
150வது வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றது .
மட்டக்களப்பு
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டிஹாரச்சி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு
மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கே .பி .
கீர்த்திரத்ன பிரதம அதிதியாக
கலந்துகொண்டார்.
ஆரம்ப
நிகழ்வாக பொலிஸ் திணைக்கள கொடி
ஏற்றப்பட்டு பொலிஸ்மற்றும் தேசிய கீதம்
இசைக்கப்பட்டது.
அனைத்தொடர்ந்து
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.
இந்த
நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது
அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.