சுகாதார வாரத்தினை முன்னிட்டு வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு நோய் தடுப்பு மருந்து ஏற்றல் நடவடிக்கைகள்

(லியோன்)

சுகாதார வாரத்தினை அனுஷ்டிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் பல சுகாதார பணி நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இதன் கீழ் மட்டக்களப்பு மாநகர சபை அனுசரணையுடன்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பொது சுகாதார பரிசோதக அதிகாரிகளும் இணைந்து  மட்டக்களப்பு  பொது சுகாதார பரிசோதக பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு  நோய் தடுப்பு மருந்து  ஏற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன  .

இந்த சுகாதார நடவடிக்கை  பணிகளில் மட்டக்களப்பு  பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை  அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் கலந்துகொண்டுள்ளனர் .




  .
  .