விபத்தில் உயிரிழந்த முதலை

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று காலை முதலையொன்று விபத்தில் உயிரிழந்துள்ளது.
மட்டக்களப்பு வாவியில் இருந்து வீதியை கடக்க முற்பட்ட முதலையே இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த முதலை சுமார் ஆறு அரை அடி நீளமுடையது எனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.