ஓட்டமாவடியில் போதைமாத்திரைகள்,கஞ்சா மீட்பு -இருவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மிக நீண்ட நாட்களாக போதைவஸ்து மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இருவர் வெவ்வேறு இடங்களில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி மற்றும் மாவடிச்சேனை பகுதிகளில் வைத்து போதைவஸ்து மாத்திரைகளையும் கஞ்சாவையும் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையிலே குறித்த நபர்கள் கைது செய்யப்படுள்ளார்கள்.

இவர்களிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போதைவஸ்து மாத்திரைகள், மற்றும் 150 கிராம் கஞ்சாவுடன் 2700 ரூபா பணம் போன்றவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.