(லியோன்)
சுகாதார வாரத்தினை
அனுஷ்டிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது உணவு சட்டத்திற்கு முரணான வகையில் விற்பனைக்கு
வைக்கப்பட்டிருந்த குளிர்பான வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாநகர பொது சுகாதார
பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு பிரதான பஸ்தரிப்பிட நிலைய பகுதி வர்த்தக நிலையங்களில் உணவு சட்டத்திற்கு முரணான வகையில் விற்பனைக்கு
வைக்கப்பட்டிருந்த குளிர்பான வகைகள் தொடர்பாக இன்று மேற்கொள்ளப்பட்ட
சோதனை நடவடிக்கையின் போது பொது சுகாதார
பரிசோதகரினால் கைப்பற்றப்பட்டுள்ளன
.
இலங்கை உணவுச் சட்டத்திற்கு எதிராக நுகர்வுக்கு பொறுத்த
மற்ற நிலையில் சீனி மட்டத்தின்
விவரணம் , நிறக் குறியீடு ,மூன்று மொழிகளிலும் விடயத்துக்கேற்ப அறிவித்தல் போன்ற
விடயங்கள் பிரசுரிக்கப்பட்டாமல் வர்த்தக நிலையங்களில்
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குடிபானங்கள் , பழச்சாறுகள் வகைகளே இவ்வாறு கைப்பற்றபட்டுள்ளன .
கைபற்றப்பட்ட குடிபானங்கள் மற்றும் பழச்சாறு வகைகள் மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டத்தை
தொடர்ந்து உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதக
பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.