மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் சிரமதான பணிகள்

 (லியோன்)

நாடளாவிய ரீதியில் மூன்றாம் தவணை பாடசாலை கற்றல் நடவடிக்கைகளுக்காக நாளை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன
.நாளை பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்களின் சுகாதாரம் மற்றும் பாடசாலைகளின் சுற்று சூழல் தொடர்பாக கவணத்தில் கொண்டு பாடசாலை மட்டத்தில் பல சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

இதன் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மாமாங்கம் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயத்தில் அதிபர் முருகதாஸ்  தலைமையில் சிரமதான பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன .


இந்த சிரமதான பணியில் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்