2016 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 8621 மாணாவர்கள் தோற்றிவுள்ளனர்

(லியோன்)
2016 ஆம் ஆண்டுக்கான உயர்தர  பரீட்சைகள்  இன்று   நாடளாவிய ரீதியில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன, இப்பரீட்சைகள் எதிர் வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள உயர்தர  பரீட்சைக்கு  நாடளாவிய ரீதியில் 315604  மாணவர்கள் தோற்றியுள்ளதுடன் இதற்காக 2204 பரீட்சை மத்திய நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன

மட்டக்களப்பு மாவட்டத்தில்   05  வலயத்திலும்  8621  மாணாவர்கள்  உயர்தர பரீட்சைக்கு தோற்றிவுள்ளதுடன் மாவட்டத்தில்  மட்டக்களப்பு , மட்டக்களப்பு மத்தி ,கல்குடா ,பட்டிருப்பு ,மண்முனை மேற்கு  ஆகிய  05 வலயத்தில்   61  பரீட்சை நிலையங்கலிலும்  7 இணைப்பு பரீட்சை நிலையங்கலிலும் இப் பரீட்சைகள்  நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது   .