(லியோன்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10.07.2016 மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு விஜயத்தை
மேற்கொண்டார் .
இலங்கையின் முதலாவது ஆங்கில பாடசாலை என பெருமை
பெற்றதும் இலங்கையில் 200வருடங்கள் பழமைவாய்ந்த பாடசாலையான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய
கல்லூரியின் 202வது ஆண்டு நிறைவின் பிரதான நிகழ்வு 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்
மெதடிஸ்த கல்லூரிக்கு வருகை தந்த ஜனாதிபதி வளாகத்தில்
ஸ்தாபிக்கப்பட்டுள்ள கல்லூரி ஸ்தாபகர் வில்லியம் ஓல்ட்
அடிகளாரின்
நினைவு தூபியினை திறந்து வைத்தார்
இந்நிகழ்வினை முன்னிட்டு மத்திய கல்லூரியின் அதிபர் விமல்ராஜ்
தலைமையில் கல்லூரியில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது.
இதன் போது கல்லூரி பழைய மாணவ சங்க தலைவரினால்
ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்
இந்நிகழ்வில் கிழக்கு மாகான ஆளுநர் ஒஸ்டின் பர்னாந்து , மட்டக்களப்பு
மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ் எம் .சார்ள்ஸ், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ,
மாகாணசபை உறுப்பினர்கள் ,கல்லூரி ஆசிரியர்கள் ,மாணவர்கள், கல்லூரி பழைய
மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்