(லியோன்)
மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு ஸ்ரீ
மாணிக்கப்பிள்ளையார் ஆலய தீர்த்த
உற்சவம் 10.07.2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா மஹோற்ஸவ காலங்களில் தினமும் மாலை 06.00 மணிக்கு அபிஷேகம் ,விசேட பூஜைகளும், மூலவர் பூஜை ஆரம்பமாகி சுவாமி வெளிவீதி வலம் வருதல் நடைபெற்றது
இடம்பெற்ற அபிஷேக பூஜை வழிபாடுகளுடன் சுவாமி ஆலயத்திலிருந்து ஊர்வலமாக
அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய
தீர்த்தகுளத்திற்கு வந்தடைந்ததும் முற்பகல் 10.00 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெற்றது .
தீர்த்த உற்சவத்தை தொடர்ந்து சுவாமி
ஆலயத்தை வந்தடைந்ததும் திருப்பொன்னூஞ்சல் , மகேஸ்வர பூஜைகள் இடம்பெற்று ஆலய வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா
நிறைவுபெற்றது