மட்டக்களப்பு செலான் வங்கி கிளையினால் நடத்தப்பட்ட செலான் டிகிரி சிறுவர் சந்தை ( VIDEO & PHOTOS )

(லியோன்) ) 

மட்டக்களப்பு செலான் வங்கி கிளையினால் நடத்தப்பட்ட செலான் டிகிரி சிறுவர் சந்தை மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது .

 மட்டக்களப்பு செலான் வங்கி கிளை முகாமையாளர் திருமதி .பத்மஸ்ரீ இளங்கோவின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு  செலான் வங்கி கிளையினால் நடத்தப்பட்ட சிறுவர்களின் செலான் டிகிரி சிறுவர் சந்தை மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் மனோராஜ் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் 05.07.2016  இடம்பெற்றது .
 சிறுவர்கள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தினை உருவாக்கும்  நோக்குடனும் பெற்றோர்கள் மத்தியில் அதனை ஊக்குவிக்கும் முகமாகவும் மட்டக்களப்பு செலான் வங்கி கிளையினால் பாடசாலை மட்டத்தில் சிறுவர் சந்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன .

இதன் ஒரு நிகழ்வாக இன்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் கிழக்குமாகாண பிராந்திய அலுவலக உத்தியோகத்தர் எஸ் .உதயகுமார் அதிதியாக கலந்துகொண்டு சிறுவர் சந்தையினை  திறந்து வைக்கப்பட்டதுடன் சிறுவர்களுக்கான  செலான் டிகிரி சேமிப்பு கணக்குகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டது

இந்நிகழ்வில் மட்டக்களப்பு செலான் வங்கி செயலாளர் திருமதி கௌதமராஜா ரேணுகா , மற்றும் வங்கி ஊழியர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் .