மாவட்ட பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான வெகுமதி வழங்கும் நிகழ்வு

(லியோன்)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150வது  வருட நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான வெகுமதி  வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட  பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களினால் சேவை திறனை  பாராட்டும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  தினேஷ் கருணாநாயகவின்  ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா  அதிபர் W J .  ஜாகொட ஆராய்ச்சி தலைமையில் உத்தியோகத்தர்களுக்கான வெகுமதி  வழங்கும் நிகழ்வும், பொலிஸ் உத்தியோகத்தர்களின்  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் 23.07.2016 சனிக்கிழமை   நடைபெற்றது .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி .பி .எஸ் . எம் . சார்ள்ஸ் மற்றும் பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் ,கல்வித்திணைக்கள அதிகாரிகள் ,மாணவர்கள் , சிவில் சமூக பிரதி நிதிகள், மத தலைவர்கள்  உட்பட பலரும் கலந்துகொண்டனர் .