(லியோன்)
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக
கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்
வருடாந்த மஹோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தினை முன்னிட்டு நேற்று
மாலை மட்டக்களப்பு,கோட்டைமுனை அருள்மிகு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து
கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாக ப+ஜை மற்றும் அபிசேக பூஜை,வசந்த மண்டப பூஜை நடைபெற்று கொடிச்சீலைக்கு பூஜைகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கொடிச்சீலை உள்வீதியுலா கொண்டுவரப்பட்டு தம்த்தடியில் விசேட பூஜைகள் நடைபெற்ற வேத,நாத,மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசகளுடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசே மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றன.
இன்று காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாக ப+ஜை மற்றும் அபிசேக பூஜை,வசந்த மண்டப பூஜை நடைபெற்று கொடிச்சீலைக்கு பூஜைகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கொடிச்சீலை உள்வீதியுலா கொண்டுவரப்பட்டு தம்த்தடியில் விசேட பூஜைகள் நடைபெற்ற வேத,நாத,மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசகளுடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசே மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றன.
இலங்கையில் பிதிர்க்கடன் தீர்க்கும் ஆலயமாக
பிரசித்திபெற்றுள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது பத்து நாட்கள் தினமும்
தம்ப பூஜை வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி மற்றும் வெளி வீதியுலா சிறப்பாக
நடைபெறவுள்ளது
இந்த உற்சவத்தில் எதிர்வரும் 01 ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் 02 ஆம் திகதி ஆடி அமாவசை தீர்த்தோற்சவம் ஆலய தீர்த்த குளத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது..
இந்த உற்சவத்தில் எதிர்வரும் 01 ஆம் திகதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதுடன் 02 ஆம் திகதி ஆடி அமாவசை தீர்த்தோற்சவம் ஆலய தீர்த்த குளத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது..