(லியோன்)
தரம் ஐந்து பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு இன்று
மட்டக்களப்பு கல்லடியில் இடம்பெற்றது
.
மட்டக்களப்பு கல்லடி
வேலூர் சமூக மேம்பாட்டு கழக
ஏற்பாட்டில் 2016ஆம் ஆண்டு
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மட்டக்களப்பு பாடசாலை மாணவர்களுக்கான இலவச முன்னோடி
பரீட்சையும் வழிகாட்டல் கருத்தரங்கு
வேலூர் சமூக மேம்பாட்டு கழக தலைவர் த
.நகுலேஸ்வரன் தலைமையில் இன்று மட்டக்களப்பு
கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில்
நடைபெற்றது .
இந்த கருத்தரங்கில் வளவாளராக
கல்லடி விவேகானந்த மகளிர் வித்தியாலய ஆசிரியர் த ,.அம்பலவாணர் விரிவுரைகள்
வழங்கினார் .
இந்நிகழ்வில் சமூக மேம்பாட்டு
கழக போசகரும் முன்னாள் வேலூர் கிராம சேவை உத்தியோகத்தர் தெ. சிவலிங்கம் , கல்லடி
வேலூர் கிராம சேவையாளர் சு .தினேஷ் மற்றும் கழக உறுப்பினர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள்
உட்பட பலர் கலந்துகொண்டனர் .