தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

(லியோன்)

தரம் ஐந்து  பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு இன்று மட்டக்களப்பு கல்லடியில்  இடம்பெற்றது
.                                             

மட்டக்களப்பு   கல்லடி வேலூர் சமூக மேம்பாட்டு கழக  ஏற்பாட்டில்  2016ஆம்  ஆண்டு  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மட்டக்களப்பு  பாடசாலை மாணவர்களுக்கான இலவச முன்னோடி பரீட்சையும்   வழிகாட்டல் கருத்தரங்கு வேலூர் சமூக மேம்பாட்டு கழக தலைவர்  த .நகுலேஸ்வரன் தலைமையில் இன்று மட்டக்களப்பு  கல்லடி உப்போடை துளசி மண்டபத்தில்  நடைபெற்றது  .

இந்த கருத்தரங்கில் வளவாளராக  கல்லடி விவேகானந்த மகளிர் வித்தியாலய ஆசிரியர் த ,.அம்பலவாணர் விரிவுரைகள் வழங்கினார் .

இந்நிகழ்வில்  சமூக மேம்பாட்டு கழக போசகரும் முன்னாள் வேலூர் கிராம சேவை உத்தியோகத்தர் தெ. சிவலிங்கம் , கல்லடி வேலூர் கிராம சேவையாளர் சு .தினேஷ் மற்றும்   கழக உறுப்பினர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர் .