கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜனா திடீர் சுகவீனம் -வைத்தியசாலையில் அனுமதி

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கதிர்காமத்திற்கு சென்றபோது அங்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாகவே இவர் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலைமை தேறிவருவதாகவும் கவலைப்பட தேவையில்லையென வைத்தியர்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.