ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கற்படிமம் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி மண்முனைப்பற்று பிரதேச
செயலகத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கற்படிமம் இன்று (15) அதிகாலை இனந்தெரியாத
நபர்களினால் சேதமாக்க்ப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த
ஒரு வாரத்திற்கு முன்பு புதிதாக நிர்மானிக்கப்பட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலகம்
என பெயர் பொறிக்கப்பட்ட கற்படிமமே இவ்வாறு இனந்தெரியாத நபர்களினால்
சேதமாக்கப்பட்டுள்ளது.
கடந்த
காலங்களில் ஆரையம்பதியில் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள்
உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.