பிரதேச செயலக மட்டத்தில் நடத்தப்பட்ட சமுர்த்தி கெக்குலு சிறுவர் கழக கலாசார , இலக்கிய போட்டிகள்

(லியோன்)

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம்  மற்றும் சமூக அபிவிருத்திப் பிரிவும் இணைந்து நடத்தப்பட்ட பிரதேச  செயலக  மட்ட சமுர்த்தி கெக்குலு சிறுவர் கழக கலாசார , இலக்கிய  சித்திரப்  போட்டிகள் இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றது  
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வாழ்வின் எழுச்சி வலய சமுர்த்தி வங்கி சமுர்த்தி பயனாளிகளின் பாடசாலை மானவார்களுக்கிடையில் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம்  மற்றும் சமூக அபிவிருத்திப் பிரிவும் இணைந்து மாவட்ட செயலக  மட்டத்தில்  நடத்தப்படவிருக்கின்ற  மாவட்ட மட்ட தேர்வு போட்டிகளுக்கான பிரதேச செயலக மட்ட போட்டிகள் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி .தவராஜா  தலைமையில் இன்று (16.07.2016)  நடைபெற்றது ..

பிரதேச செயலக மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட நாடகம் , ஓவியம் , அறிவிப்பு , நாட்டார்பாடல் ,  நடனம்  ஆகிய கலை கலாசார இலக்கிய போட்டிகளில் தேர்வுகளின் புள்ளிகள்  அடிப்படையில் தெரிவு செய்யப்பட  மாணவர்கள் மாவட்ட  செயலக மட்டத்தில் நடத்தப்படவுள்ள  இலக்கிய போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர் .   


இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , மாணவர்கள் ,ஆசிரியர்கள் பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர்