மட்டக்களப்பில் சிறப்புமிக்க
ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி அருள்
மிகு ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் 12.07.2016 செவ்வாய்க்கிழமை நண்பகல் மகோற்சவ குரு சிவஸ்ரீ த. சிவகுமாரக் குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமானது.
வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன்
விசேட யாக பூஜைகள் மற்றும் அபிசேக பூஜை,வசந்த மண்டப பூஜை நடைபெற்று கொடிச்சீலைக்கு பூஜைகள் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து கொடிச்சீலை உள்வீதியுலா
கொண்டுவரப்பட்டு தம்த்தடியில் விசேட பூஜைகள் நடைபெற்ற வேத,நாத,மேளங்களுடன் கொடியேற்றம் சிறப்பாக
நடைபெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட
அபிசே மற்றும் ஆராதனைகளும் நடைபெற்றன.
பத்து தினங்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த
உற்சவத்தில் தினமும் தம்ப பூஜை வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி மற்றும்
வெளி வீதியுலா நடைபெறவுள்ளது.
இந்த உற்சவத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி தேர்த்திருவிழா
நடைபெறவுள்ளதுடன் 21 ஆம் திகதி தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.