களுவாஞ்சிகுடியில் தூக்கில் தொங்கிய இளைஞன் உயிரிழப்பு

மட்டக்களப்பு,மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று திங்கட்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான்.
களுவாஞ்சிகுடியை சேர்ந்த கடந்த ஆண்டு உயர்தர பரீட்சை எழுதிய கிருஸ்ணகுமார் நிரோஜன்(20வயது)என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் உள்ள தனது கற்கும் அறையில் இருந்த இளைஞன் நீண்ட நேரமாக வெளியில் வராததை அவதானித்த பெற்றோர் கதவினை உடைத்து திறந்தபோது குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உடனடியாக இளைஞன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.