சுற்றுப்புறச்சூழல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் உள்ள அலுவலகங்கள் மத்தியில் நடாத்தப்பட்ட சுற்றுப்புறச்சூழல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
மட்டக்களப்பு நீதின்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி,கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி என்.மாறசிங்க,மட்டக்களப்பு மாவட்ட நீதின்ற நீதிபதி எம்.பி.முகைதீன்,நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இயங்கும் நிர்வாகம் மற்றும் நீதிமன்ற பிரிவுகளில் உள்ள சுற்றாடல்களை அழகுபடுத்தி தூய்மையினை பேணும் வகையில் இந்த போட்டிகள் நடாத்தப்பட்டன.

இந்த போட்டிகளில் முதல் இடத்தினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் பெற்றுக்கொண்டது.

இதன்போது சிறந்த முறையில் சுற்றுப்புறச்சூழலை அழகுபடுத்தி சுத்தமாக வைத்திருக்க பாடுபட்டவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் மற்றும் சுற்றுலா நீதிமன்ற நீதிபதிகளும் கலந்துகொண்டனர்.