செட்டிபாளையத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் செட்டிபாளையத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் எருவில் கோடைமேடு பிரதேசத்தினை சேர்ந்த மா.டினேஸ்குமார்(19வயது)என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

தாந்தாமலை உற்சவத்திற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தபோது அதிகவேகம் காரணமாக தொலைபேசி கம்பத்தில்மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் இரண்டுபேர் பயணம் செய்தபோதிலும் பின்பக்கம் இருந்தவர் சிறிய காயங்களுடன் உயிர்தப்பியபோதிலும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.