(லியோன்)
கிராம சேவையாளரின் சேவை நலனை பாராட்டி
கௌரவிக்கும் நிகழ்வு 16.07.2016 சனிக்கிழமை மட்டக்களப்பு கூழாவடி கிராமத்தில் இடம்பெற்றது.
கடந்த மூன்று தசாப்த காலம் கிராம சேவையாளர் சேவையில் எட்டு வருடங்கள் கூழாவடி கிராம சேவை பிரிவில் கடமையாற்றி ஒய்வு பெற்று
செல்லும் கிராம சேவையாளர் திருமதி
.பாரதிதாசன் கிருபைநாயகியை கிராம பொதுமக்களால் பாராட்டி பொன்னாடை
போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது .
நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் விருந்தினர்களாக புதிதாக கடமை ஏற்றிருக்கும் கிராம சேவை
உத்தியோகத்தர் என்டன் ஜெபஸ் , திவிநெகும வாழ்வின் எழுச்சி சமுர்த்தி
உத்தியோகத்தர் என் . ரவீந்திரகுமார் , இருதயபுரம் கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர்
திருமதி .சுகந்தினி ஜெகதர்சன் , கூழாவடி இந்து இளைஞர் சேவை மன்ற தலைவர் ப .யோகராஜா
மற்றும் கிராம மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , கிராம முதியோர் சங்க
உறுப்பினர்கள் , அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் , கிராம சமூக நல
மேம்பாட்டு உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்