“ மதுவை வெற்றி கொள்வோம் “ எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளது .

(லியோன்)

“ மதுவை வெற்றி கொள்வோம் “ எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் நாளை நடைபெறவுள்ளது .

மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற சமுதாயயங்கள் சீர்திருத்த காரியாலயத்தினால் ஏற்பாட்டில்  “ மதுவை வெற்றி கொள்வோம் “ எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வு நாளை காலை  09.00  மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை கல்லடி விமோச்சனா இல்லத்தில் நடைபெறவுள்ளது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம் . கணேசராஜா மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலாளர்கள் , அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் .


இங்கு இடம்பெறும் கலந்துரையாடலை சமூகத்திற்கு தெளிவு படுத்தும் நோக்குடனும், இதனை ஊடகங்கள் வாயிலாக  சமூகத்திற்கு கொண்டு செல்ல  அனைத்து ஊடகவியலாளர்களையும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர் .