(லியோன்)
கிழக்குமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற
முத்தமிழ் விழா போட்டி நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது .
இதன் கீழ் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் முத்தமிழ் விழாவினை முன்னிட்டு
கிராமிய பாடல் போட்டிகள் மண்முனை வடக்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி .
தர்ப்பணா ஜெயமாறனின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் பிரதேச
செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது .
இந்த போட்டி நிகழ்வில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலை
,மட்டக்களப்பு இந்து கல்லூரி, மட்டக்களப்பு மகாஜன மகளிர் கல்லூரி ஆகிய மூன்று
பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டன .
இடம்பெற்ற போட்டிகளில் நடுவர்களின் தரப்படுத்தலுக்கு அமைவாக முதலாம்
இடத்தினை மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையும் , இரண்டாம் இடத்தினை
மட்டக்களப்பு மகாஜன மகளிர் கல்லூரியும் , மூன்றாம் இடத்தினை மட்டக்களப்பு இந்து
ம]கல்லூரியும் பெற்றுக்கொண்டன .
இந்த போட்டி நிகழ்வுக்கு நடுவர்களாக
மட்டக்களப்பு தன்னாமுனை புனித வளனார் மகா வித்தியாலய சங்கீத ஆசிரியை
திருமதி .எம் . மகேந்திரன் ,மட்டக்களப்பு கிரான்குளம் விபுலானந்தர் வித்தியாலய
சங்கீத ஆசிரியர் திருமதி . எஸ் . அற்புதநாதன்,
வவுணதீவு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் .செல்வி . வை . தனுஷியா ஆகியோர்
கலந்துகொண்டனர்.