ஜெயந்திபுரம் விஜயபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீற்கப்பட்டுள்ளthuது

(லியோன்)

மட்டக்களப்பு ஜெயந்திபுரம் விஜயபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் 03.06.2016 வெள்ளிக்கிழமை  காலை பொலிசாரினால் மீற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் .

மட்டக்களப்பு பொலிஸ்  பிரிவுக்குற்பட்ட ஜெயந்திபுரம் – விஜயபுரம் இலக்கம் , 114,  இரண்டாம் குறுக்கு வீதியை சேர்ந்த  ரட்ணராஜா ராஜா வயது 43 என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் 03.06.2016 வெள்ளிக்கிழமை  காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவிக்கின்றனர் .  


இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை  மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .