(லியோன்)
மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த
திருவிழாவில் சனிக்கிழமை மாலை புனிதரின் திருச்சொரூப பவனியும் தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது.மட்டக்களப்பு கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது.
ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை விசேட திருவிழா திருப்பலியை மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை அன்னம்மாள் ஆலய
பங்கு தந்தை எக்ஸ் .ஐ .ரஜீவன் தலைமையில் பங்குத்தந்தை றோசான் , அருட்பணி லோரன்ஸ் , அருட்பணி
நவரெட்ணம் , அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளார் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர்
ஆலய திருவிழா திருப்பலியில்
விசேட நற்கருணை வழிபாடுகளுடன் கொடியிறக்கும்
நிகழ்வு சிறப்பாக நடைபெற்று திருச்சொரூப ஆசிர்வாதமும் இடம்பெற்றது .
இந்த திருவிழா திருப்பலியில் கல்லடி , டச்பார் பகுதி
பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர்