(லியோன்)
மட்டக்களப்பு பாவற்கொடிச்சேனை கிராம சேவையாளர் பிரிவில் கற்பகக்கேணி கிராம பகுதியில் நேற்று மாலை காட்டுயானை தாக்கியதன் காரணமாக ஆறு
வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பாவற்கொடிச்சேனை கிராம
சேவையாளர் பிரிவில் கற்பகக்கேணி கிராம
பகுதியல் நேற்று மாலை குளிக்க செல்லும் வேளையில்
காட்டுபகுதியில் இருந்து வந்த யானை ராஜதுரை ( வயது 55) என்பவரையும் அவரது
மகள் ராஜதுரை லோஜினி ( வயது 6) சிறுமியையும் தாக்கியுள்ளதாக பொலிசார்
தெரிவிக்கின்றனர் .
இந்த சம்பவத்தின்
போது சிறுமி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாகவும் தந்தை காயங்களுக்குள்ளான
நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கின்றனர் .