மட்டக்களப்பு மகளிர் அரிமா கழகத்தின் புதிய நிர்வாகத்தினர் பதவியேற்பு நிகழ்வு

மட்டக்களப்பு மகளிர் அரிமா கழகத்தின் புதிய நிர்வாகத்தினர் பதவியேற்பு நிகழ்வு மட்டகளப்பு  பூம்புகார் லயன்ஸ் கழக மண்டபத்தில் மாலை இடம் பெற்றது.
2015ஃ2016 வருடத்துக்கான கழகத்தின் தலைவி அரிமா. சாந்தா ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரிமா. எந்திரி என்.பி.ரஞ்சன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

பிரதம அதிதியால் 2016ஃ2017 ஆம் ஆண்டுக்கான மகளிர் அரிமா கழகத்தின் தலைவியான அரிமா பாரதி கென்னடி அவர்களுக்கு அலுவலக முத்திரைகளை வழங்கி புதிய தலைவிக்கு பொறுப்புகளை வழங்கிவைத்தார்.

மகளிர் அரிமா கழகத்தின் புதிய செயலாளராக அரிமா டிலாந்தி தவக்குமார், பொருளாளராக ஹேதாரணி, மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக அரிமா nஐயபிரபா சுரேஸ், அரிமா கௌரி,அரிமா கலாநிதி நதீரா மரியசந்தானம், அரிமா, வசந்தகுமாரி, அரிமா ஜனார்த்தனி ஆகியோரும் பதவியேற்றனர்.

முதலாவது, இரண்டாவது மூன்றாவது உப தலைவிகளாக அரிமா டாக்டர் ரோசி, அரிமா டெலினா பிரின்ஸ், அரிமா தணுஜா ஜுட் போன்றோரும் டேமராக அரிமா ஜெனிராவும், ரெயில் ருயிஸ்டராக அரிமா பிரியதர்சினியும் பதவியேற்றனர்.

இந்நிகழ்வில் 2016ஃ2017 வருடத்துக்கான வலயத்தலைவர் அரிமா ராஜா, பிராந்திய தலைவர் அரிமா ஸ்ரீரங்கன், பிராந்திய செயலாளர் அரிமா முரளிதரன், ஆளுநரின் விசேட ஒருங்கிணையாளர் அரிமா மனோகரன், ஆளுநரின் நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணையாளர் அரிமா தர்ஷன் ஆகியோரும் 2015ஃ2016க்கான   கபினட் செயலாளர் வலயத்தலைவர் பிராந்திய தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

விடைபெற்று செல்லும் தலைவி தன்னுடன் பணிபுரிந்தவர்களுக்கு ஞாபகார்த்த நினைவுச்சின்னங்களை வழங்கி வைத்தார். எதிர்கால திட்டங்களைப் பற்றி நிருவாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட தலைவி அரிமா பாரதி கென்னடி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிற அரிமா கழகங்களின் ஆசியுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.