வீட்டுவேலைதொழிலாளர்களின் உரிமையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் விழிப்புணர்வு நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுவேலைதொழிலாளர்களின் உரிமையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை காலை விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
தேசிய வீட்டுவேலை தொழிலாளர்கள் தினத்தினை முன்னிட்டு வீட்டுவேலை தொழிலாளர் சங்கமும் சூரிய பெண்கள் கூட்டமைப்பும் இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.

இதனையொட்டி மட்டக்களப்பு பொதுச்சந்தைக்கு முன்பாக வீட்டுத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் தங்களை காத்துக்கொள்ளும் சட்ட ரீதியான வழிமுறைகள் தொடர்பில் விழிப்பூட்டும் வீதி நாடகங்கள் நடாத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது வீட்டுவேலை தொழிலாளர்களை அறிவுறுத்தும் பல்வேறு துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.