இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயத்தில் திருவுடல் திரு இரத்த பெருவிழா ( VIDEO & PHOTOS )

(லியோன்)

மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயத்தில் திருவுடல் திரு இரத்த பெருவிழா 29.05.2016 மாலை மிக  சிறப்பாக இடம்பெற்றது .


மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் இருதயபுரம் பங்கின் திரு இருதயநாதர் ஆலயத்தில் பங்கு தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் தலைமையில் 29.05.2016 மாலை விசேட திருப்பலியும் அதனை தொடர்ந்து  திருவுடல் திரு இரத்த பெருவிழாவை  முன்னிட்டு விசேட நற்கருணை பவனி இடம்பெற்றது .

இந்த நற்கருணை பவனி இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி பவனியாக நற்கருணை பேழை எடுத்து செல்லப்பட்டு கருவப்பகேணி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு விசேட ஜெப  ஆராதணை இடம்பெற்றது .

இதனை தொடர்ந்து நற்கருணை பேழை பவனியாக கருவப்பங்கேணி  புனித வனத்து அந்தோனியார்  ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆலயத்தில் வைக்கப்பட்டதன் பின் மட்டக்களப்பு அமிர்தகழி புனித கப்பலேந்தி அன்னை ஆயலய பங்குதந்தை சி .வி .அன்னதாஸ் தலைமையில் விசேட ஜெப வழிபாடும் ,மறைவுரைகளும் அதனை தொடர்ந்து  நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றது .


இடம்பெற்ற திருவுடல் திரு இரத்த பெருவிழா மற்றும்  நற்கருணை பவனியில் ஆயித்தியமலை பங்குதந்தை ஜி .சுலக்சன் , சிறிய குரு மட அருட்தந்தை  மொறாயஸ் ,ஆயர் இல்ல அருட்தந்தை  மரியதாஸ் ஆகியோருடன்  இருதயபுரம் , கருவப்பங்கேணி ,காந்தி கிராமம் பங்கு மக்களும்  கலந்து சிறப்பித்தனர் .