(லியோன்)
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையில் இடம்பெற்றது .
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையில் இடம்பெற்றது .
2016 ஆம் ஆண்டு வலய மட்ட பாடசாலைக்கிடையிலும் ,
மாகாண மட்ட பாடசாலைக்கிடையிலும்
நடத்தப்பட்ட கரம் போட்டியில் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்தின் 15 வயதுகுற்பட்ட
மாணவர்களும் , 19 வயதுகுற்பட்ட மாணவர்களும் கலந்துகொண்டு 2016ஆம் ஆண்டு மாகாண மட்டத்தில் ஜம்பியன் ஆனார்கள் .
இப்பாடசாலையானது மட்டக்களப்பு நகரத்தை அண்டிய ஒரு கிராம புற
பாடசாலையாகும் . இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும் வறுமை கோட்டின்கீழ்
வாழ்கின்ற குடும்ப மாணவர்கள் ஆவர் .
இவர்களை பல சாவால்களின் மத்தியில் கல்வி கற்றுக்கொண்டு
பாடசாலை அதிபர் .திருமதி ஜெ . ரதீந்திரகுமார் .உடல் கல்வி ஆசிரியர் திருமதி எஸ் .
அரியதாஸ் ஆகியோரின் வழிகாட்டலில் மற்றும்
பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோரின் ஒத்துழைப்புடன் இவ்வாறான போட்டிகளில் பங்கு பற்றி பாடசாலைக்கு
பெருமை சேர்த்துள்ளனர்
இவ்வாறான நிலையில்
பாடசாலைக்கும் தமது பெற்றோருக்கும் பெருமை சேர்த்த இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையில்
இடம்பெற்றது .
இந்நிகழ்வில் ஆசிரியர்
ஆலோசகர்கள், பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் , பெற்றோர்கள்
கலந்துகொண்டனர் .