பிள்ளையான்,பிரசாந்தனின் பிணை மனு ஒத்திவைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோரின் பிணை மனு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பு மேல்முறையீட்டு நீதிமன்றில் இரு வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்திரகாந்தனின் பிணைமனு மீதான விசாரணை அடுத்த மாதம் 30ஆம் திகதியும் பிரசாந்தனின் மனுமீதான விசாரணை அடுத்த மாதம் 16ஆம் திகதியும் மேல்நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திராணி விஸ்வலிங்கத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை சந்தேக நபரான கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மனுமீதான விசாரணையின்போது சட்டத்தரணிகள் வாதப்பிரதிவாதங்களை முன்னைத்தனர்.

அதனைத்தொடர்ந்து எதிர்வரும் ஜுன் மாதம் 30ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைப்பதாக நீதிவான் உத்தரவிட்டாhர்.

ஆரையம்பதியில் இரட்டை கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோரின் பிணை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைப்பதாக நீதிவான் உத்தரவிட்டாhர்.